TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – 2 கட்டங்களாக நடைபெறவிருக்கும் தேர்வு! புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு வருகிற ஜூலை மாதத்தில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில், தற்போது கணினி வழியில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த தகவல் காண்போம்.
TN TET தேர்வு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து போட்டித்தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தனர். தற்போது இந்த ஆண்டு கொரோனா குறைந்த நிலையில் அனைத்து போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து குரூப் 2, 2A மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்வுகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அந்த வகையில் TNTET தேர்வுக்கான அறிவிப்பு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இத்தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 6.3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இந்த ஆசிரியர் தகுதி தேர்வு (டிஆர்பி) மூலம் நடத்தப்படுகிறது. இந்த வருடம் அதிகமான ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதால் கூடுதல் பணி இடங்களை நிரப்ப உள்ளதாகவும் எதிர்பார்க்க படுகிறது.
TN TET ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – விரைவில் தேர்வினை நடத்த திட்டம்?
இதில் முதல் தாள் விண்ணப்பிக்க 12ம் வகுப்பில் 50% மதிப்பெண் தேர்ச்சி மற்றும் ஆசிரியர் பயிற்சி படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இரண்டாம் தாள் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி அல்லது ஆசிரியர் பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து TET தேர்வு எழுத்துத் தேர்வு மட்டுமே நடைபெற்று வந்த நிலையில்,தற்போது இந்த ஆண்டு கணினி வழியில் இரு கட்டங்களாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்த உள்ளதாக தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.