மத்திய அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அடுத்த கட்ட முடிவு இது தான்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இதனை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
இந்தியாவில் மத்திய அரசு தங்களது கடந்த வருடம் அகவிலைப்படி உயர்வு அளித்தது. அதன்படி 2 கட்டங்களாக ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு தற்போது 31% வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான ஊழியர்களும் ஓய்வூதியர்களும் பயன் பெற்று வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அடுத்ததாக 2022ம் ஆண்டு முதல் அகவிலைப்படி மேலும் 3% உயரும் என்று தகவல்கள் வெளியானது. அதன்படி 3% உயர்த்தப்பட்டு தற்போது 34% அதிகரிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
TNPSC Group 8 தேர்வுக்கு விண்ணப்பித்தீர்களா? முக்கிய பதிவு இதோ..!
கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைத்த பலன்களும், சலுகைகளும் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கவில்லை என்று ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். மாநில அரசு ஊழியர்கள் தங்களுக்கு பழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மூன்று மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்தியுள்ளனர். அதனால் மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தவுள்ளதாக மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் சுமார் 25 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பேரணி நடத்தவுள்ளதாக அகில இந்திய பாதுகாப்பு துறை ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 27ஆம் தேதி பொதுத்துறை வங்கி ஊழியர்களும் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.இதில் ரயில்வே ஊழியர்கள் உள்பட பல்வேறு மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.