கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

0
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு - அரசு அறிவிப்பு!
கோடை விடுமுறை முடிந்து மீண்டும் ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு – அரசு அறிவிப்பு!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்றது. இதையடுத்து புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள பள்ளிகள் திறப்பதற்கான தேதி குறித்த அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு

இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா காரணமாக இயங்கப்படவில்லை. அதனால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டது. அதன்படி அனைத்து மாநிலங்களிலும் பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதே போல் புதுவையிலும் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுக்குரிய கால அட்டவணை வெளியிடப்பட்டது.

மத்திய அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அடுத்த கட்ட முடிவு இது தான்!

இதில் அறிவித்தப்படி கடந்த 5ம் தேதி அன்று தொடங்கி மே 31ம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து 10ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 17ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டு எப்போது தொடங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. மேலும் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டதால் சனிக்கிழமைகளில் வகுப்பு நடைபெற்றது. இது மாணவர்களுக்கு சுமையாக இருந்ததால் வரும் கல்வியாண்டு விரைவில் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியிருப்பதாவது, புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 2022-23ம் கல்வியாண்டு வருகிற ஜூன் 23ம் தேதியன்று தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் 1 முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே ஜூன் 23ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். அதனால் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!