1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15 இல் பள்ளிகள் திறப்பு – ஜூலை 15 வரை ஆய்வு நடத்த திட்டம்!
தமிழகத்தில் வருகிற ஜூன் 13ல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூன் 15ம் தேதி முதல் கல்வி நிலையங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகப் பணியாளர்களின் 100 சதவீத வருகையை உறுதி செய்ய திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டது. இதனால் கற்றல் திறன் பாதிக்கப்படுவதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் கொரோனா தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வரும் வரை நேரடி வகுப்புகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதை தொடர்ந்து மொத்த நோய்த்தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது.
தமிழக தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!
இதனால் மாநில அரசுகள் படிப்படியாக பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்திலும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதனை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூன் 15 முதல் பள்ளிகள் செயல்பட உள்ளன. மேலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகப் பணியாளர்களின் 100 சதவீத வருகையை உறுதி செய்வதற்காக திடீர் ஆய்வு மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வுகள் நடப்பு ஆண்டு ஜூன் 15 முதல் ஜூலை 15 வரை ஒரு மாத காலம் வரை மேற்கொள்ளப்படும்.
அதன்படி ஆய்வுகளில் ஆசிரியர் பணிக்கு வராதது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் சத்தீஸ்கரில் மாணவர்களின் நலனுக்காக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறைகளை முறையாக பராமரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இலவச பாடப்புத்தகம், சீருடைகள், சைக்கிள்கள் மற்றும் மதிய உணவு, RTE சேர்க்கை, உதவித்தொகை மற்றும் பள்ளி உள்கட்டமைப்பு போன்ற அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதை ஆய்வு செய்ய அந்தந்த துறையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.