தமிழகத்தில் திங்கட்கிழமை (ஜூன் 13) முதல் பள்ளிகள் திறப்பு – களைகட்டும் வியாபாரம்!
தமிழகத்தில் ஜூன் 13ம் தேதி 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் பரபரப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது பற்றிய விவரங்களை பார்ப்போம்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பெருத்தெற்றின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்தி வந்தனர். கொரோனா பாதிப்பின் காரணமாக பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, இடம்பெயர்வு என பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வந்தனர். கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான துறைகள் பாதிக்கப்பட்டன. அந்த வகையில், ஜவுளி கடை மற்றும் பள்ளிகள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? புதிய பார்முலா அறிமுகம்!
கடந்த கல்வியாண்டில் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாத இறுதி வரைக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் 13ம் தேதி தேர்வுகள் நடைபெற்று விடுமுறை விடப்பட்டன. மேலும் அடுத்த கல்வியாண்டில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வித்துறை தெரிவித்திருந்தது. மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதியும் பள்ளி திறக்கப்பட உள்ளன.
Exams Daily Mobile App Download
கடந்த இரண்டு வருட காலமாக பள்ளிகள் திறக்கப்படாததால் சீருடைகளை அனைத்தும் விற்பனை அடையாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஜவுளிக்கடைகளில்வியாபாரம் சுறுசுறுப்பு அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் வெளிமாநிலமான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் ஈரோடு ஜவுளி சந்தையில் வந்து வாங்கி செல்கின்றனர்.