மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? புதிய பார்முலா அறிமுகம்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? புதிய பார்முலா அறிமுகம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? புதிய பார்முலா அறிமுகம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு? புதிய பார்முலா அறிமுகம்!

தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஃபார்முலாவின் படி சம்பளம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

சம்பள உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து தொடர்ச்சியாக சில நல்ல செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. அதாவது, 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஃபார்முலாவின் படி ஊதியம் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஃபார்முலா அமலுக்கு வந்த பிறகு, ஊழியர்களின் சம்பளம் அவர்களின் செயல்திறனுடன் இணைக்கப்பட்ட அதிகரிப்புக்கு ஏற்ப உயரும்.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? ஜூன் 27ல் வேலை நிறுத்தப் போராட்டம்!

இது தொடர்பாக வெளிவந்துள்ள ஆதாரங்களின்படி, 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்த புதிய பார்முலாவை கொண்டு வர மத்திய அரசு தயாராகி வருகிறது. அந்த வகையில் அகவிலைப்படி தொகை 50 சதவீதத்திற்கு மேல் இருந்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தானாக அதிகரிக்கும் வகையில் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஃபார்முலாவை மத்திய அரசு தயாரித்து வருகிறது. இப்போது ஊழியர்களின் சம்பளத்தை அவ்வப்போது உயர்த்த வேண்டும் என்பதுதான் இந்தப் புதிய ஃபார்முலாவுக்குப் பின்னால் உள்ள அரசின் நோக்கம் ஆகும்.

இது தானியங்கி ஊதிய திருத்த முறை என பெயரிடப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இதற்கிடையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 2016ம் ஆண்டு பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தும் போது, சம்பள கமிஷனுக்கு பதிலாக, அரசாங்கம் ஊழியர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த வகையில் நடுத்தர ஊழியர்களுக்கும், கீழ்மட்ட ஊழியர்களுக்கும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பது அவரது விருப்பமாக இருந்தது.

Exams Daily Mobile App Download

அதே நேரத்தில், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி புதிய ஃபார்முலாவுக்கு ஊதியக் கட்டமைப்பை மாற்ற விரும்புவதாக நீதிபதி மாத்தூர் குறிப்பிட்டிருந்தார். இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்தி சம்பளத்தை கணக்கிடும் போது வாழ்க்கை செலவைக் கருத்தில் கொண்டு சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. இது நிகழும் போது, கீழ்மட்ட ஊழியர்கள் பயனடையலாம். குறிப்பாக லெவல் மேட்ரிக்ஸ் 1 முதல் லெவல் 5ல் உள்ள மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் குறைந்தது 21 ஆயிரமாக உயரும். இருப்பினும், இதற்கான சூத்திரம் இன்னும் உருவாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!