தமிழகத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – ஷாக் அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து இருந்தாலும் கொரோனாவின் அடுத்த அலை தாக்கத்தில் இருந்து தப்பிக்க அரசு சார்பில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இதுவரை 2வது தடுப்பூசி செலுத்தாமல் 1.22 கோடி பேர் இருப்பதாக சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
கடந்த 2 ஆண்டுகளில் கொரோனாவின் கோர பிடியில் இருந்து மக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்தனர். பள்ளிகள் செயல்படாமல் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டது. கொரோனா அலைகளை கட்டுப்படுத்த தடுப்பூசி போடுவது தான் ஒரே வழியாக இருந்தது. அதனால் அரசு சார்பில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. அதன் மூலம் பலர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் குறைந்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கு அமலாகுமா? பொதுமக்கள் அச்சம்!
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் நேற்றைய நிலவரப்படி ஒரு கோடியே 65 லட்சத்து 12 ஆயிரத்து 625 பேர் முதல் மற்றும் 2வது தவணை தடுப்பூசி போடாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக வருகிற 12 ஆம் தேதி 1 லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பட்டியல் தயார் செய்து தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் தடுப்பூசி அதிகம் பேர் செலுத்தாமல் இருக்கும் மாவட்டமாக மதுரை இருக்கிறது. மதுரை மாவட்டத்தில் 3 லட்சத்து 7 ஆயிரம் பேர் தடுப்பூசி போடாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக சென்னையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரும், கன்னியாகுமரியில் 2 லட்சத்து 97 ஆயிரம் பேரும், திருப்பத்தூரில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 124 பேரும், ராணிப்பேட்டையில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 151 பேரும் முதல் தவணை தடுப்பூசி போடாமல் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் வருகிற ஞாயிற்றுக் கிழமை நடைபெற இருக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.