தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஊரடங்கு அமலாகுமா? பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பாதிப்புகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளது. அதனால் தடுப்பு பணியாக ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஊரடங்கு:
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதும் அனைத்து மாநில அரசுகளும் பொது மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் தளர்வுகளை அளித்தது. அதனால் மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி சென்று கொண்டிருகின்றனர். இந்த நேரத்தில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா நான்காம் அலை கொரோனா பரவ கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நேரத்தில் இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கு கைநிறைய சம்பளத்தில் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்!
அந்த வகையில் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் உயர்ந்து வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 139 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் மட்டும் 58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 927 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் புதிதாக 82 பேருக்கும், செங்கல்பட்டில் மட்டும் 29 பேருக்கும் வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக சென்னையில் 9, 13 வது மண்டலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. ஐடி, அண்ணா பல்கலைக்கழகம்,போன்ற இடங்களில் வெளி மாநிலங்களில் இருந்து மாணவர்கள் வருவதால் கொரோனா தொற்று அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முககவசமும், தடுப்பூசியும் கட்டாயம் தேவை என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். சோதனை, தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசிகள் முறையாக செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தற்போது அதிகரித்து வரும் பாதிப்புகளால் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.