TNPSC Group 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – போட்டித்தேர்வுக்கு தயாராகும் வழிமுறைகள் இதோ!
TNPSC குரூப் 4 & VAO தேர்வு வரும் ஜூலை மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தேர்வுக்கான பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது தேர்வுக்கு எவ்வாறு தயாராகுவது என்பது குறித்து இப்பதிவில் காண்போம்.
குரூப் 4 & VAO:
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் டைபிஸ்ட், ஸ்டெனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு 2022 ஜூலை 24ம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டு குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வுக்கு 21 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கான பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 4 தேர்வானது ஒரே ஒரு எழுத்து தேர்வை அடிப்படையாகக் கொண்டது. குரூப் 4 தேர்வின் எழுத்துத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும்.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு!
முதல் பகுதி தமிழ் மொழித் தகுதி தேர்வு ஆகும். இதில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். அதில் 40 மதிப்பெண்கள் பெறுவது அவசியம். அப்போது தான் பிற பாட பகுதிகள் மதிப்பீடு செய்யப்படும். அடுத்த பகுதியான பொது அறிவு பகுதியில் 100 வினாக்கள் இடம்பெறும் அதில் 75-பொது அறிவு வினாக்களும், 25- திறனறி தேர்வு வினாக்களும் இடம்பெறும். தமிழ் மொழி பாட பகுதியில் இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும். குறிப்பாக 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
தமிழ் மற்றும் கணித பகுதி நமக்கு அதிக மதிப்பெண்களை பெற்று தரும் என்பதால் 125 வினாக்களில் 115 வினாக்களுக்கு மேல் சரியாக விடை அளிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். பொது அறிவுப் பகுதியில் 10 கேள்விகள் வரை பள்ளி புத்தகங்களை தாண்டி வெளியில் இருந்து வினாக்கள் இடம்பெறும். மீதமுள்ள 65க்கும் மேற்பட்ட கேள்விகள் பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து வரும். கணித பகுதியில் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம்.