தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு!

0
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்து விலக்கு!

தமிழகத்தில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பெறும் துறைத்தேர்வுகளை எழுதும் ஆசிரியர்களுக்கு ஒரு சிறப்பான சலுகையை வழங்கியுள்ளது.

ஆசிரியர்கள் கவனத்திற்கு:

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. அதனால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி இதற்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு அத்துடன் இதில் அறிவித்தபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு தேர்விற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட வேண்டும் என்று விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை!

இதையடுத்து 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஜூன் 2ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளது. இதனை தொடர்ந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜூன் 10ம் தேதி தொடங்க உள்ளது. அத்துடன் ஆசிரியர்களுக்கு வசதியாக ஆசிரியர்கள் அவர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள மையத்திற்கு சென்று விடைத்தாள் திருத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்தேர்வுகளை பெரும்பாலான ஆசிரியர்கள் எழுத உள்ளனர். இத்தேர்வினை எழுத ஆசிரியர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது தேர்வு எழுத உள்ள ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியர்களிடம் இருக்கும் தேர்வுக்கூட நுழைவுச்ச்சீட்டின் படி அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!