தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆசிரியர்கள் கருப்பு பேஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டம்:
தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2004ம் ஆண்டு மத்திய அரசு மாற்றியமைத்தது. அதன்படி தற்போது தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் எந்தவொரு பலனும் கிடைப்பதில்லை என்றும் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஆரம்ப காலத்தில் இருந்து அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது பழைய ஓய்வூதிய திட்டம் சில மாநிலங்களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் திமுக தனது தேர்தல் வாக்குறுதியில், தான் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. அதன்படி மீண்டும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த ஏதேனும் சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை ஆராய அரசு வல்லுநர் குழு அமைத்துள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது இந்த குழு தனது பரிந்துரைகளை அரசிடம் வழங்கியுள்ளது. இந்த பரிந்துரைகளை ஆராய்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக இன்னும் அறிவிப்பு வெளியாகாததால் இதனை கண்டித்து 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்ட களத்தில் இறங்கியுள்ளன. மேலும் இந்த போராட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். அதனால் அரசு இது தொடர்பாக விரைவில் நடவடிக்கை மேற்கொண்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.