தமிழகத்தில் 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த வித மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆணித்தரமாக தெரிவித்து உள்ளார். மேலும், 2022 – 2023 கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்க உள்ளதால் முன் ஏற்பாடுகளை தமிழக அரசு தீவிரமாக செய்து வருகிறது.
திறப்பு தேதி:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. அதனால் அனைத்து மாணவர்களுக்கும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம்!
அதன்படி ஏற்கனவே அறிவித்திருந்தபடி, வரும் கல்வியாண்டு திறக்கப்படுவதற்கான தேதிகளை குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில் தெரிவித்தாவது, 1 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 13ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வைரலாகி வந்தது. இந்நிலையில், கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவித்திருக்கிறார்.