தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம்!

0
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3 நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம்!

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் இந்த மாதம் ரேஷன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

அகவிலைப்படி:

தமிழகத்தில் கடந்த 2021 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது முதல்வர் முக ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் அரசு ஊழியர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் அமல், சம்பள உயர்வு போன்ற வாக்குறுதிகளை அளித்தார். அதன்படி இவர் ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி 2022ம் ஆண்டு முதல் உயர்த்தப்படும் என்று மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தெரிவித்தார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு 2022 – தயாராவது எப்படி? முழு விவரம் இதோ!

இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தங்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்றும் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அரசிடம் இருந்து எவ்வித அறிவிப்பும் இல்லை. இந்த நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் உடனடியாக அகவிலைப்படியை உயர்த்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர். அதன்படி ஜூன் 7ம் தேதி அடுத்த மூன்று நாட்களுக்கு அகவிலைப்படி வழங்க வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

Exams Daily Mobile App Download

இதன் காரணமாக ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ரேஷன் பொருட்களை விநியோகிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!