ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இதெல்லாம் கடைபிடிப்பது அவசியம்!
நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை அவசியமாகிவிட்டது. இது அரசின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள தேவையான முக்கிய ஆவணம் ஆகும். மேலும் ஆதார் எண் சமையல் எரி வாயுவுக்கான மானியம் பெறுவது உள்ளிட்ட அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் நலத்திட்ட சேவைகளைப் பெற உதவுகிறது. இந்நிலையில் ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களைக் கடைபிடிக்குமாறு ஆதார் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
ஆதார் கார்டு:
இந்திய குடிமகன்களுக்கு யுஐடிஏஐ அமைப்பு வழங்கும் 12 இலக்க அடையாள எண் தான் ஆதார் அட்டை ஆகும். இன்றைய நாளில் இந்தியாவில் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இது மாறியுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட நபரின் பெயருடன், அவரது பெயர், புகைப்படம், பால், பிறந்த தேதி, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் (கைரேகை, கருவிழி உடற்கூறு) விவரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும். இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இந்த அட்டை வழங்கப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்குக் கிடையாது.
Exams Daily Mobile App Download
வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அரசின் நலத்திட்டங்கள் பெறுவது வரையில் எண்ணற்ற சேவைகளுக்கு ஆதார் கார்டு அவசியமானது. அதாவது, நம் கையில் எப்போதுமே ஆதார் கார்டு இருப்பது அவசியம் என்ற சூழல் உருவாகியுள்ளது. அதே சமயம், ஆதார் கார்டை மையமாக வைத்து சில மோசடிகளும் அரங்கேறி வருகின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி யுஐடிஏஐ அமைப்பு , ஆதார் கார்டு விஷயத்தில் கவனமுடன் இருக்க வேண்டிய விஷயங்களை வலியுறுத்தியுள்ளது.
1. ஆதார் கார்டு ஓடிபியை யாரிடமும் ஷேர் செய்யக்கூடாது.
2. ஆதார் கார்டில் உள்ள மொபைல் நம்பர் ஆக்டிவாக வைத்திருக்க வேண்டும். புதிய நம்பர் மாற்றியிருந்தால் அதை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும்.
3.ஆதார் கார்டை வெரிஃபை செய்ய https://myaadhaar அல்லது uidai.gov.in வெப்சைட்டை பயன்படுத்தவும்.
4. ஆதார் தொடர்பான QR code-களை தேவையில்லாமல் ஸ்கேன் செய்யக்கூடாது.
5. ஆதார் எண்கள் பகுதி மறைக்கப்பட்ட மாஸ்க் ஆதாரை பயன்படுத்த வேண்டும்.
6. ஆதார் தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்ள மொபைல் போனில் maadhaar ஆப் டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளவும்.