மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் சம்பள உயர்வு? விரைவில் அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் 34 சதவீதத்தில் இருந்து 39 சதவீதமாக அகவிலைப்படி உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மத்திய அரசு ஊழியர்கள் அதிக மகிழ்ச்சியில் உள்ளனர்.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு இரு முறை அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக கடந்த 2020, 2021 ஆகிய இரு ஆண்டும் ஜனவரி மாதம் அகவிலைப்படி வழங்குவது நிறுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 17 சதவீதம் மற்றும் 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், 2022 மார்ச்சில் 7 ஆவது ஊதியக்குழுவின் பரிந்துரையின் படி அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், வரும் ஜூலை மாதம் அகவிலைப்படி மீண்டும் உயர்த்தப்படும் என்று அரசு ஊழியர்கள் காத்துகொண்டு உள்ளனர். அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வரவிருக்கிறது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஜூலை 1 முதல் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ஊழியர்களின் அகவிலைப்படியானது 39 சதவீதமாக உயரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த உயர்வைத் தொடர்ந்து ஊழியர்களின் சம்பளமும் அதிரடியாக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (ஏஐசிபிஐ) 125.1 புள்ளிகளாக இருந்தது. அது பிப்ரவரி மாதத்தில் மேலும் சரிந்து 125க்கு வந்தது. இதன் அடிப்படையில் மார்ச் மாதத்திலும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 புள்ளி மட்டும் உயர்ந்து 126க்கு வந்தது. எனவே ஜனவரி முதல் ஜூன் வரையிலான அனைத்திந்திய நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையில் அடுத்த அகவிலைப்படி உயர்வு இருக்கும் என தகவல்கள் கூறுகிறது. மேலும் ஏப்ரல், மே மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை என்றாலும், அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பார்க்கும்போது, நுகர்வோர் விலைக் குறியீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஜூலை மாதத்தில் அகவிலைப்படி 5 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது.
N.Akash.Natarajan.No.531a.anna.st.kurthevelu.puyel.chenine.66