நாளை (ஜூன் 5) யுபிஎஸ்சி தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு!
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப்பணித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். நாளை (ஜூன் 5) யுபிஎஸ்சி முதன்நிலை தேர்வுகள் நடைபெறுவதால் ஜூன் 4 மற்றும் ஜூன் 5 சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே அறிவிப்பு:
ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை தேர்வு செய்ய மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த ஆண்டிற்கான தேர்வு முடிவுகள் சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் இந்த ஆண்டிற்கான தேர்வு நாளை (ஜூன் 5)நடைபெற இருக்கிறது. அதனால் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு வசதியாக சென்னை புறநகர் ரயில்கள் இயங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பின் படி சென்னை மற்றும் புறநகரில் வார நாட்களை விட சனி ஞாயிறு கிழமைகளில் குறைவான ரயில்கள் இயங்குவது வழக்கம். ஜூன் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் யுபிஎஸ்சி முதன்நிலை தேர்வுகள் நடைபெற இருக்கிறது. அது சனி மற்றும் ஞாயிறு கிழமை என்பதால் வழக்கமாக 30 சதவிகிதம் மின்சார ரயில்கள் குறைத்து இயக்கப்படும். அதனால் தேர்வுக்கு செல்ல இருக்கும் தேர்வர்களுக்கு சென்னை புறநகர் ரயில்கள் வார நாட்கள் அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
Post Office இல் தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு – நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!
இதன் மூலம் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம், சென்ட்ரல்- சூலூர்பேட்டை, கடற்கரை- செங்கல்பட்டு, கடற்கரை- வேளச்சேரி ஆகிய ரயில்கள் ஜூன் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் வாரநாட்கள் அட்டவணையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனால் தேர்வர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் யுபிஎஸ்சி முதன்நிலை தேர்வு எழுதலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.