Post Office இல் தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு – நாளை விண்ணப்பிக்க கடைசி நாள்!
இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள கிராம தபால் ஊழியர் மற்றும் உதவி தபால் ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம் என்றும், கட் ஆஃப் பற்றிய தகவல்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.
அஞ்சல் துறை வேலைவாய்ப்பு
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு வருட காலமாக எந்த ஒரு துறையிலும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிடாமல் இருந்தன. இந்த வருடம் கொரோனா குறைந்த நிலையில் படித்தவர்களுக்கு உதவும் வகையில் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் அஞ்சல் அலுவலகங்களில் காலியாக உள்ள 38,926 பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4,310 பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பித்தவர்கள் 18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இருப்பினும் SC மற்றும் ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு என்பதையும் தெரிவித்துள்ளன.
மேலும், தேர்வு கட்டணமாக பொது பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும் என்றும் மற்ற பிரிவினருக்கு கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் நபர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் சதவீதம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். அதன்படி கிராம தபால் ஊழியர் பணியிடத்திற்கு ஊதியமாக 12,000 ரூபாயும், உதவி கிராம தபால் ஊழியர் பணிக்கு 10,000 ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.