தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.58 ஆயிரம் சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 13 பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் நிலையில் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் தனியார் மற்றும் அரசு துறைகள் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வந்தனர். இதையடுத்து தனியார் துறைகள் தவறாது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை நடத்தி வருகின்றனர். அதனை தொடர்ந்து அரசுத்துறையும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.
Exams Daily Mobile App Download
மற்ற துறைகளை தொடர்ந்து தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 13 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணியிடங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்வோம். வழக்கு எழுத்தர் காலியிடங்களின் எண்ணிக்கை – 1 இப்பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்க்கு ஊதியமாக ரூ.18,500 – 58,600 வழங்கப்படும். அடுத்ததாக சீட்டு விற்பனை எழுத்தர் பதவியில் 1 காலியிடம் உள்ளது. இப்பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். துப்புரவு பணியாளர் பணியிடத்தில் காலியிடங்களின் எண்ணிக்கை 3, மேலும், கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், சம்பளம் ரூ.10,000 – 31,500 வழங்கப்படும்.
கால்நடை பராமரிப்பு பதவியில் காலியிடங்களின் எண்ணிக்கை 1 ஆக உள்ளது. கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும், சம்பளம் ரூ.10,000 – 31,500 வரை வழங்கப்படும். காவலர் (தொகுப்பூதியம்) காலியிடங்களின் எண்ணிக்கை – 3, இதற்க்கு கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் ரூ.6,000. திருமஞ்சனம் காலியிடங்களின் எண்ணிக்கை 2 ஆக உள்ளது. கல்வித் தகுதியாக தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். வேதபாட சாலையில் ஓராண்டு படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,900 – 50,400 உதவி யானைப்பாகன் காலியிடங்களின் எண்ணிக்கை – 1, இதற்க்கு கல்வித் தகுதி தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – நிதியமைச்சர் PTR முக்கிய அறிக்கை!
மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோயில், பேரூர், பேரூர் வட்டம், கோவை மாவட்டம் – 541010 என்ற முகவரியில் ஜூன் 28ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.