தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – நிதியமைச்சர் PTR முக்கிய அறிக்கை!
2003 ஆம் ஆண்டிற்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. தற்போது இந்த பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் குறித்து சில வதந்திகள் பரவி கொண்டிருப்பதாக அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஓய்வூதியத் திட்டம்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றன. இதன் பின்னர் அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் அனைவரும் இந்த திட்டத்தில் உறுப்பினராக உள்ளனர். தற்போது வரைக்கும் இந்த திட்டத்தில் 6,02,377 பணியாளர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download
பணியாளர்களின் ஊதியத்தில் இருந்து அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி என்கிற அடிப்படையில் 10 சதவீதம் வரைக்கும் பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த தொகைக்கு நிகரானத் தொகையை அரசின் பங்களிப்பாக பணியாளர் கணக்கிலேயே செலுத்தப்பட்டு வருகிறது. அதற்கான உரிய வட்டியும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர கூட்டுத்தொகை, பொது வருங்கால வைப்பு நிதிக்கு வட்டித் தொகை கணக்கிடப்படுகிறது.
BOB வங்கியில் மாதம் ரூ.30,000 சம்பளத்தில் தேர்வில்லாமல் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது ஆண்டு வட்டி விகிதம் 7.1 சதவீதமாக உள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள அனைத்து அரசு பணியாளர்களுக்கும் வட்டித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், ஓய்வூதியத் திட்டம் குறித்து பல வதந்திகள் பரவிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். மேலும், யாரும் இது போன்று அரசு ஊழியர்கள் மத்தியில் பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த முறை உங்களுக்கு ஓட்டு போடுவோமா கலைஞரால் ஈர்க்கப்பட்டு 25 வருடமாக கட்சியிலிருந்து இந்த முறை மாறுபடுகிறேன்