சென்னை: இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – ஒரு சவரன் ரூ.37,920க்கு விற்பனை!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகிறது. இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரணுக்கு ரூ.280 குறைந்து, ரூ.37,920க்கும் விற்பனையாகிறது. அதனால் பொதுமக்கள் தங்கம் வாங்க நகைக்கடைகளை நோக்கி படை எடுக்கின்றனர்.
தங்கம் விலை:
தங்கத்தின் விலை எவ்வளவு இருந்தாலும் அதன் மீது மக்களுக்கு உள்ள மோகம் குறையாமல் இருக்கிறது. கொரோனா பேரிடர் காலத்தில் கூட தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. நாட்டின் நிதிநிலைமை ஒரு பக்கம் இருந்தாலும், மக்கள் நகைக்கடைகளை தேடி சென்று கொண்டிருக்கின்றனர். மேலும் தங்க நகைகளின் மீது முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானதாகவும், அதிகம் லாபம் ஈடுட்டுவதாகவும் இருக்கிறது. அதனால் கூட மக்கள் விரும்பி நகைகளை வாங்குகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதன் படி கடந்த 10 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.4,775க்கு விற்பனையானது, மேலும் சவரன் ரூ.38,200க்கு விற்பனையானது. ஆனால் இன்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்தது ரூ.4740 ஆக விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.37,920க்கும் விற்பனையாகிறது.
தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – மாதம் 3.5 லட்ச ரூபாய் வரை ஊதியம்!
பல நாட்களுக்கு பின் தங்கத்தின் விலை ரூ 38 ஆயிரத்திற்கு கீழ் வந்துள்ளது. கடந்த மே 23 ஆம் தேதி 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4837க்கும் சவரன் ரூ.38,696க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பொதுமக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இப்போது நல்ல நேரம் என முதலீட்டாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். மேலும் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 50 பைசா நேற்று அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது. அதன் படி வெள்ளி கிராம் ரூ.67 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.