1ம் வகுப்பு 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் பள்ளிகள் திறப்பு!
கேரளா மாநிலத்தில் ஜூன் 1ம் தேதியான நாளை முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வரும் நிலையில், அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளது.
புதிய கல்வி ஆண்டு:
கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த கல்வியாண்டில் கொரோனா அலை பரவல் குறைந்ததை அடுத்து தாமதமாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
மாணவர்களுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு, அதன்படி இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும் நடத்தப்பட்டது. கேரளா மாநிலத்தில் 11ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஏப்ரல் மாதம் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு தாமதமாக வகுப்புகள் தொடங்கியதால் அவர்களுக்கு ஜூன் மாதம் தான் இறுதித்தேர்வு நடக்க உள்ளது. வழக்கமாக அனைத்து வகுப்புகளும் புதிய கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி தொடங்கப்படுவது வழக்கம்.
TNPSC இன் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – 71,900 சம்பளம்! முழு விவரங்கள் இதோ!
ஆனால் கடந்த 2 ஆண்டுகள் கழித்து தற்போது புதிய கல்வி ஆண்டு ஜூன் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்த வருடம் பொதுக்கல்வி நிறுவனங்களில் 42.90 லட்சம் மாணவர்கள் படிக்க உள்ளதாகவும் கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி கூறினார். கூடவே, ஓடாத நிலையில் இருக்கும் கேரளா அரசு பேருந்துகளை வகுப்பறைகளாக மாற்ற உள்ளனர். இதற்காக திருவனந்தபுரம் மணக்காட்டில் உள்ள ஒரு அரசுப் பள்ளிக்கு ரூ. 4 லட்சம் செலவில் வகுப்பறையாக மாற்றப்பட்ட பஸ் வழங்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.