TNPSC இன் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்பு – 71,900 சம்பளம்! முழு விவரங்கள் இதோ!
தமிழக இந்து சமய அறநிலைய சார்நிலைப் பணியில் செயல் அலுவலர் பதவிக்கான (Executive Officer, Grade-IV included in Group-VIII Services) ஆட்சேர்ப்பு அறிவிப்பை, TNPSC வெளியிட்டுள்ள நிலையில் இந்த பதவிக்கு தகுதியானவர்கள் மற்றும் இந்து சமயத்தை பின்பற்றும் விண்ணப்பத்தாரர்களிடமிருந்து மட்டுமே ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் செயல் அலுவலர் நிலை-IV பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி, செயல் அலுவலர் பணியில் 36 காலியிடங்கள் நிரப்பபட உள்ளது. மேலும் இந்தப் பதவிக்கு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அல்லது இணைக்கல்வித்தகுதி, இளங்கலையில் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இதனை அடுத்து மதம் மற்றும் சமய நிறுவனங்களில் குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் தொடர்ந்து, 01.07.2022 அன்று, விண்ணப்பதாரர் வயது 25க்கு கீழ் இருக்கக் கூடாது. மேலும் 42 வயது நிறைவடையாமல் இருக்கும் ஆதிதிராவிடர்(எஸ்சி), ஆதிதிராவிடர் பழங்குடியினர், அனைத்து வகுப்பைகளையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். 39 வயது நிறைவடையாமல் இருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் 37 வயது நிறைவடையாமல் இருக்கும் ஏனைய பிரிவினர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த பணிக்கு தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எழுத்துத் தேர்வில் இரண்டு தாள்கள் உள்ளன குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தகுதியானவர்கள் இந்த பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.19,500 – 71,900 சம்பளம் வரை வழங்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு www.tnpsc.gov.in
- ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2022
- எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 11.09.2022
தாள் I: கட்டாயத் தமிழ் மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு., பொது அறிவித்தேர்வு
தாள் II: இந்து மதம், சைவமும், வைணவமும்.