தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? 25% ஓய்வூதியம்! அரசு எடுக்கப்போகும் முடிவு!
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதற்கு கடந்த 15 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செய்யப்படுத்த ஒரு குழு அமைக்கப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.
ஓய்வூதிய திட்டம்
தமிழகத்தில் அரசு பணியில் ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்களின் பணிக்காலம் முடிந்த பிறகும் அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாக வழங்கப்படும். அத்துடன் தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து கடந்த 2004ம் ஆண்டு புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்தியது. மேலும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தில் கிடைக்கும் பணிக்கொடை , குடும்ப பாதுகாப்பு நிதி, கூடுதல் ஓய்வூதியம் உள்ளிட்டவை கிடைப்பதில்லை என்று அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவித்தனர்.
Exams Daily Mobile App Download
அத்துடன் தங்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அரசு இது தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் அரசு ஊழியர்கள் போராட்ட களத்தில் இறங்கியுள்ளனர். மேலும் திமுக அளித்த வாக்குறுதியில், தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1ம் வகுப்பு 10ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் பள்ளிகள் திறப்பு!
அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டத்தில் , அரசு ஊழியர்கள் பணி நிறைவடைந்த பிறகு கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை மாதந்தோறும் பென்சனாக வழங்கப்படும். இது தற்போது ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையை பொறுத்து 25% ஆக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள சேமிப்பு தொகையில் இருந்து முன்பணம் பெற்று கொள்ளலாம். இதற்கு கால வரம்பை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இது தொடர்பான அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.