சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ஏற்றம் அடைந்து வருவதால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நகைகள் வாங்குவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தங்கத்தின் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலம் முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகைப்பிரியர்கள் காத்திருந்தனர். ஆனால் தற்போது வரை தங்கத்தின் விலை குறைந்தபாடில்லை மாறாக நாளுக்கு நாள் ஏற்றம் அடைந்து தான் வருகிறது. கொரோனா பரவல் ஊரடங்கு இதற்கு மத்தியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் காரணத்தால் உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தது. இதனால் நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி, இறக்குமதி குறையத் தொடங்கியது.
Exams Daily Mobile App Download
போதிய அளவு இருப்பு இல்லாததால் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை விலை ஏற்றம் அடைந்தது. அதே போல ஏற்கனவே உயர்ந்துள்ள தங்கத்தின் விலை மேன் மேலும் உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தினந்தோறும் தங்கத்தின் விலையானது காலையில் ஒரு விலை மாலையில் ஒரு விலை என்று ஒரு நாளைக்கு இரண்டு முறை பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து விலை மாறுபடுகிறது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.38,120-க்கு விற்கப்பட்டது.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – புதிய கல்வி ஆண்டுக்கான அட்டவணை வெளியீடு!
ஆனால் இன்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.38,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.4,775-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.66.60-க்கு விற்கப்படுகிறது.