EPFO கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் வழங்கும் வங்கிகள், பொது சேவை மையம் (CSC), தபால் அலுவலகம், தபால்காரர், UMANG ஆப் மற்றும் அருகிலுள்ள EPFO அலுவலகம் ஆகியவற்றில் ஆயுள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கலாம் என்ற அறிவிப்பை EPFO அமைப்பு வெளியிட்டுள்ளது.
EPFO அறிவிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை ட்வீட் செய்துள்ளது. அதாவது EPS-95 பென்சன் திட்டத்தில் பயன் பெறுவோர் இனி எப்போது வேண்டுமானாலும் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. மேலும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்படும் நாளில் இருந்து ஒரு ஆண்டுக்கு அந்த சான்றிதழ் செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டியிருக்கும். மேலும் ஆயுள் சான்றிதழ்கள் அல்லது ஜீவன் பிரமான் பத்ரா, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஒரு முக்கியமான ஆவணமாகும்.
தமிழகத்தில் நாளை (மே 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
ஓய்வூதியம் பெறுபவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாக ஆவணம் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க நிறைய வழிகள் உள்ளன. பென்சன் வழங்கும் வங்கியில் சமர்ப்பிக்கலாம். பிஎஃப் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று இந்த வேலையை முடிக்கலாம். அது கஷ்டமாக இருந்தால் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் ஆப் மூலமாகவோ போஸ்ட் ஆபீஸ் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். போஸ்ட் மேன் மூலமாக ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்கும் வசதியும் வந்துவிட்டது. இதுமட்டுமல்லாமல் உமாங் மொபைல் ஆப் மூலமாகவும் பென்சன் பயனாளிகள் தங்களது ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும்.
Exams Daily Mobile App Download
ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் போது பிபிஓ நம்பர், ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு விவரம், மொபைல் நம்பர் போன்றவை தேவைப்படும். இந்த மொபைல் நம்பர் ஆதாருடன் இணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். கொரோனா போன்ற பிரச்சனைகளை கருத்தில் கொண்டு தான் பென்சன் வாங்குபவருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் EPFO அதன் இணையதளத்தில் ஓய்வூதியம் பெறுவோர் போர்ட்டலில் ஜீவன் பிரமன் விசாரணை, உங்கள் பிபிஓ எண், பிபிஓ விசாரணை/பணம் செலுத்துதல் விசாரணை மற்றும் ஓய்வூதிய நிலையை அறிதல் என பல சேவைகளை வழங்குகிறது.