தமிழகத்தில் நாளை (மே 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (மே 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மே 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (மே 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (மே 26) வியாழக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை முதல் மின்தடை ஏற்படும் என திருப்பூர் மாவட்ட செயற்பொறியாளர் தகவல் வெளியிட்டுள்ளார். அதன்படி எந்தெந்த பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என்பதை தெரிந்து கொள்ள விரும்பினால் மேலும் படியுங்கள்.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவால் விபத்துகள் ஏற்படும். அவற்றை தவிர்ப்பதற்காக தான் இந்த பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு மாதமும் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.

Post Office இல் பெண் குழந்தைகளுக்கு சூப்பரான சேமிப்பு திட்டம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அவ்விதமாக அவினாசி துணை மின் நிலையம், வேலம்பாளையம் துணை மின் நிலையம் மற்றும் பெருமாநல்லூர் துணை மின் நிலையம் ஆகிய பகுதிகளில் நாளை மே 26 அன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

அதனால் அவினாசி துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள ஆட்டையாம்பாளையம், எஸ்.மேட்டுப்பாளையம், பட்டறை, ராவுத்தம் பாளையம், செம்மாண்டம்பாளையம், சின்னேரிபாளையம், அபிராமி கார்டன், ரங்கா நகர், கருமாபாளையம், வலையபாளையம், வேலங்காடு, கருக்கம்பாளையம், பாரதி நகர், தண்ணீர் பந்தல் காலனி மற்றும் சேவூரில் ஒரு பகுதியிலும், அழகாபுரி நகர், அரசுப் பணியாளர் நகர், மகாலட்சுமி நகர், வெள்ளியம்பாளையம், கரையாம்பாளையம், சுண்டக்காம் பாளையம்,ஆலங்காட்டு பாளையம், வேட்டுவபாளையம் மற்றும் அசநல்லிபாளையம்.

Exams Daily Mobile App Download

வேலம்பாளையம் துணை மின் நிலையம் பகுதியை சுற்றியுள்ள பிச்சம்பாளையம் புதூர், ஆர்.கே.நகர், ராஜா நகர், சக்தி நகர், எஸ்.டி ரோடு. ஆத்துப்பாளையம், செட்டிபாளையம், சஞ்சீவி நகர், பெரியார் நகர், ராஜீவ் நகர், நெசவாளர் காலனி மற்றும் ஐஸ்வர்யா கார்டன்.

பெருமாநல்லூர் துணை மின் நிலையம் பகுதியை சுற்றியுள்ள அப்பியாபாளையம், ஆண்டிபாளையம், ரங்கா நகர், கந்தம்பாளையம், வாரணாசி பாளையம், திருமுருகன் நகர், கற்பகம் கார்டன், லட்சுமி கார்டன், சின்னப்பள்ளம், மொய்யண்டம் பாளையம், கொண்டத்து காளியம்மன் கோவில் மொய்யாண்டம் பாளையம் புதூர், அண்ணா நகர் மற்றும் செட்டிபாளையத்தில் ஒரு பகுதி என மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!