பாக்கியா தான் கோபியின் மனைவி என்பதை ராதிகாவிடம் கூறிவிடும் மூர்த்தி – சீரியலில் புதிய திருப்பம்!
ராதிகாவை தான் கோபி திருமணம் செய்துகொள்ள போகிறார் என்பது தெரிந்ததும் மூர்த்தி ராதிகாவிடம் அனைத்து உண்மையையும் கூறுவதால், கோபியும் நம்மை ஏமாற்றிவிட்டார் என ராதிகா வருந்தும் படியாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியா தான் கோபியின் மனைவி என்பது தெரியாமல் தான் ராதிகா இத்தனை நாட்களாக கோபியை காதலித்து கொண்டிருந்தார். குடும்பத்தில் உள்ள யாருமே என்னை கவனிப்பதில்லை, காசுக்காக மட்டுமே என்னை அந்த வீட்டில் வைத்திருக்கிறார்கள் என கண்டவாறு பொய் சொல்லி தான் ராதிகாவை கோபி காதலிக்க வைத்தார்.
Exams Daily Mobile App Download
ஆரம்பத்தில் பாக்கியாவும், ராதிகாவும் சிறந்த நண்பர்களாக இருப்பதால் உண்மை தெரியவந்து விடக்கூடாது என்பதற்காக இருவரையும் பிரிக்க கோபி பிளான் போட்டார். ஆனாலும், கோபியின் பிளான் செல்லுபடியாகவில்லை. இதற்கு பிறகு ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவிற்கு ராதிகா வரும் போது கூட ராதிகா கண்ணில் மாட்டிவிட கூடாது என்பதற்காக ரூமை பூட்டி கொண்டு உள்ளேயே இருந்தார். பாக்கியா வீட்டை விட்டு ராதிகா கிளம்பியதுமே ராதிகாவை சந்தித்து கோபி பேசுகிறார். கோபி ராதிகாவுடன் நெருக்கமாக நின்று சிரித்து சிரித்து பேசுவதை பார்த்து மூர்த்திக்கு சந்தேகம் வருகிறது.
குழந்தையின் உயிரை காப்பாற்றியதால் கண்ணம்மா மீது பாசம் காட்டும் பாரதி – ப்ரோமோ ரிலீஸ்!
சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காக மூர்த்தியும் தனமும் ராதிகாவின் வீட்டிற்கு செல்கின்றனர். உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என ராதிகாவிடம் மூர்த்தி கேட்க, ராதிகாவும் கோபியின் புகைப்படத்தை எடுத்து காட்டுகிறார். அதை பார்த்ததுமே மூர்த்திக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கோபியிடமே போய் கேட்கிறார். ஆனால், கோபி கேட்பதாக தெரியவில்லை. பாக்கியாவின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என நினைத்து ராதிகாவிடம் கோபியை பற்றிய அனைத்து உண்மையையும் மூர்த்தி கூறிவிடுவது போன்றும், ராதிகா கோபியிடம் சண்டை போடுவது போன்றும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.