LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு ஜாக்பாட் அறிவிப்பு – அரசின் முடிவு என்ன?
இந்தியாவில் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது இத்திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு பதிலாக விலையை குறைத்தால் போதும் என இல்லத்தரசிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சிலிண்டர்
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2016ம் ஆண்டு ‘பிரதான மந்திரி உஜ்வாலா யோஜனா’ திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 8 கோடி பயனாளர்கள் இணைந்துள்ளனர். இதனை தொடர்ந்து உஜ்வாலா 2.0 திட்டத்தை இந்த ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டருடன் அடுப்பையும் வழங்க உள்ளதாக அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இத்திட்டத்தில் இணைவதற்கு சில நிபந்தனைகளை அரசு வகுத்துள்ளது.
பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு அறிவிப்பு!
அதாவது இத்திட்டத்தில் இணைவதற்கு விண்ணப்பதாரர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்த பெண்ணாக இருக்க வேண்டும். அத்துடன் ஏற்கனவே சமையல் சிலிண்டர் இணைப்பு பெறாதவராக இருக்க வேண்டும். இதையடுத்து விண்ணப்பதாரர்கள் இந்திய குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் வேறு எந்த சமையல் சிலிண்டர் திட்டத்திலும் பயனாளராக இருக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சிலிண்டரின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் தற்போது உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பயனாளிகளுக்கு ஒரு வருடத்திற்கு 12 எரிவாயு சிலிண்டருக்கு தலா ரூ.200 வீதம் மானியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக இல்லத்தரசிகள் மத்தியில் கேட்ட போது, தங்களுக்கு மானியம் ஏதும் வேண்டாம் என்றும் சிலிண்டர் விலை குறைத்தாலே போதும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஏனெனில் கொரோனா காரணமாக மானியம் வழங்கப்பட்டு வந்தது நிறுத்தி வைக்கப்பட்டது. அதனால் தங்களுக்கு இப்போது மானியம் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என்று கருத்து தெரிவிக்கின்றனர்.