பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு அறிவிப்பு!

0
பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு - மத்திய அரசு அறிவிப்பு!
பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு - மத்திய அரசு அறிவிப்பு!
பென்ஷன் வாங்குபவர்கள் கவனத்திற்கு – மத்திய அரசு அறிவிப்பு!

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்பவர்கள் தங்களது வருடாந்திர அடையாள உறுதி நடவடிக்கைகளை சிஎஸ்சி சேவை மையங்களை அணுகி அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

பென்ஷன்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பணி, சம்பளம், பென்ஷன் உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. இந்த சில பிரிவினருக்கு மட்டும் அகவிலைப்படி சம்பள உயர்வு வழங்க உள்ளதாக மத்திய பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து விட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற பல கோரிக்கைகளை முன் வைத்து அரசு ஊழியர்கள் சார்பில் பல ஆண்டு காலமாக தொடர்ந்து போராட்டங்களை நடத்தப்பட்டு வந்தன.

Exams Daily Mobile App Download

மேலும் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் 2022ஆம் ஆண்டு மே 17ஆம் தேதி வரை கிடைக்கப் பெற்ற தரவுகளின் அடிப்படையில் வெரிஃபிகேஷன் செய்ததன் மூலம் ஓய்வூதிய நிர்வாகத்தின் கீழ் வந்துள்ள ஓய்வூதியதாரர்கள் தங்களது வருடாந்திர சான்றளிப்பு நடவடிக்கையை உறுதி செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு முன்னதாக அடையாள சான்றளிப்பு நடவடிக்கையை நிறைவு செய்திருக்க வேண்டும். ஆனால் இன்னும் இவர்கள் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றன என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதனால் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சிஎஸ்சி சேவை மையங்களை அணுகி வருடாந்திர சரிபார்ப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் மே 31ம் தேதி பொது விடுமுறை – இடைத்தேர்தல் எதிரொலி!

மேலும் ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள DPDO அலுவலகத்தை அணுகியும் வாழ்க்கை சான்று வழங்கலாம் மற்றும் ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருக்கும் வங்கிகள் மூலமாகவும் இந்த சான்றிதழை உறுதி செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளன. அதனை தொடர்ந்து, மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கு வருடாந்திர சான்றளிப்பு நடவடிக்கை அவசியமானது. இந்த நடவடிக்கையை நிறைவு செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கும், சலுகை அடிப்படையில் கடந்த மாத ஓய்வூதியத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!