ராதிகா, பாக்கியாவிடம் ஒருவழியாக மாட்டிக் கொண்ட கோபி – சீரியலில் அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியல், கணவன் கோபி. அப்பாவியான தனது மனைவிக்கு தெரியாமல் தனது தோழியை திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கிறார். இந்த விஷயம் பாக்யாவுக்கு எப்போது தெரியப்போகிறது என்ற பரபரப்பு திருப்பங்களுடன் இந்த சீரியல் நகர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ ஓன்று வெளியாகி ரசிகர்களுக்கு சிறப்பான எபிசோடுகள் வரும் வாரத்தில் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது.
வரப்போகும் ட்விஸ்ட்:
பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த கதையின்படி, கோபியின் அப்பாவிற்கு 75 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்திற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம், பாக்கியலட்சுமி சீரியல் குடும்பத்துடன் இணைந்து உள்ளன. இந்த விழாவிற்காக தனது தோழியான ராதிவை, பாக்யா அழைத்துள்ளார். இந்த விழாவிற்கு ராதிகாவும் பாக்யா வீட்டிற்கு வருகிறார். ஆனால் கோபி மீட்டிங் என்று சொல்லி ராதிகா போகும் வரையில் தன்னுடைய அறையிலேயே இருந்து விடுகிறார். ராதிகா கிளம்பியதை அடுத்து மிகவும் சந்தோஷம் அடைகிறார். தொடர்ந்து கடைக்கு செல்வதாக கூறி ராதிகாவை வரவழைத்து சாலையில் அவரை சந்தித்து, அவரது கையைப் பிடித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்வை மூர்த்தி பார்த்து விடுகிறார்.
இதையடுத்து சந்தேகம் கொள்ளும் மூர்த்தி, தனம் ராதிகா வீட்டிற்கு சென்று உங்களது வருங்கால கணவரின் புகைப்படத்தை காட்டுங்கள் என மூர்த்தி கேட்கிறார். ராதிகா, கோபியின் புகைப்படத்தை காட்ட அந்த புகைப்படத்தை பார்த்ததும் மூர்த்தியும், தனமும் அதிர்ச்சியடைந்து விட்டனர். தொடர்ந்து, மூர்த்தி கோபியிடம் வந்து இது குறித்து விவாதம் செய்கின்றனர். ஆனால் அவர் ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார். இதையொட்டி இருவருக்கும் சண்டை நடக்கிறது. ஆனால் வெளியில் இருக்கும் யாருக்கும் இந்த சண்டை தெரியாது. தொடர்ந்து மூர்த்தி, கோபியின் இந்த ஏமாற்று வேலையை குடும்பத்தினரிடம் சொல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் இந்த வார ப்ரோமோ ஓன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில், தனம் பாக்கியாவிடம் உங்களை இப்படியே விட்டுடு போறது கஷ்டமா இருக்கு என்று வருத்தப்படுகிறார், இருப்பினும் பாக்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை, இதை தொடர்ந்து தனம் மற்றும் மூர்த்தி இருவரும் ராதிகா வீட்டிற்குச் சென்று நீங்க நினைச்சுட்டு இருக்க மாதிரி கோபி நல்லவர் கிடையாது. உங்களையும், அவர் குடும்பத்தையும் சேர்த்து ஏமாற்றி கொண்டு இருக்கிறார் என சொல்லிவிட்டு சென்றனர். இதை கேட்டு ராதிகா குழப்பத்தில் திகைத்து போய் நின்றார். இதை அடுத்து ராதிகா என்ன முடிவு எடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இவ்வாறு பரபரப்பான திருப்பங்களுடன் வரும் வாரத்தில் கதை செல்கிறது.