மனித வெடிகுண்டாக மாறும் பார்வதி, காப்பாற்றுவாரா சந்தியா? “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்த திருப்பம்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் பார்வதியை காணாமல் குடும்பத்தில் அனைவரும் தவித்து இருக்கின்றனர். இந்நிலையில் பார்வதியை செல்வம் மனித வெடிகுண்டாக மாற சொல்கிறார். அதற்கு பார்வதி சம்மதிக்காமல் இருந்தால் குடும்பத்தை அழித்து விடுவேன் என மிரட்டுகிறார்.
ராஜா ராணி 2:
ராஜா ராணி 2 சீரியலில் பார்வதியை செல்வம் கடத்தி வைத்திருக்க உண்மை தெரியாமல் இருந்த குடும்பத்தினர் பல இடங்களில் பார்வதியை தேடி அலைகின்றனர். ஆனால் பார்வதி பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருக்கிறது. போலீசிடம் புகார் தெரிவிக்க, ரயிலில் அடிபட்டு விழுந்த பெண்ணின் உடல் பார்வதியா என பார்க்க சொல்கின்றனர். ஆனால் சரவணன் அது கண்டிப்பாக பார்வதியாக இருக்காது என நம்புகிறார். பின் சந்தியா சென்று வந்து பார்வதி இல்லை என சொல்கிறார்.
குடும்பத்தில் அனைவரும் அப்போது தான் நிம்மதியாக இருக்கின்றனர். பார்வதியின் செல்போன் கடையில் தான் முடிந்திருக்கிறது. அது மட்டுமில்லாமல் கடையில் பார்வதியின் உடைந்த வளையல் துண்டுகள் கிடக்கிறது. மேலும் பார்வதின் கர்சீப் கடையில் இருந்து எடுக்கப்படுகிறது. அதை எல்லாம் பார்த்து விட்டு சந்தியாவிற்கு செல்வத்தின் மீது சந்தேகம் வருகிறது. ஆனால் செல்வம் மட்டுமில்லாமல் பார்வதியை கடந்த விக்கியின் அப்பா கூட பல வேலைகளை செய்யலாம்.
Exams Daily Mobile App Download
எனவே இருவரில் யாராக இருக்கும் என்ற குழப்பத்தில் சந்தியா இருக்க விக்கி அப்பா அவருடைய வீட்டில் இருப்பதை பார்த்து சந்தியாவிற்கு செல்வம் மீது தான் சந்தேகம் கிளம்புகிறது. இதற்கிடையே செல்வம் பார்வதியை மனித வெடிகுண்டாக தயார் செய்ய முடிவு செய்கிறார். ஆனால் பார்வதி அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இருக்க அப்போ உன் குடும்பத்தை வெடிகுண்டு போட்டு கொன்று விடுவேன் என மிரட்டுகிறார். அதனால் பார்வதி மனித வெடிகுண்டாக மாற ஒப்புக் கொள்கிறார். பார்வதியை சந்தியா காப்பாற்றுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.