கோபியின் தில்லு முல்லு வேலைகளை கண்டுபிடித்த மூர்த்தி, கோவத்தில் கத்திய கோபி – “மகா சங்கமம்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

0
கோபியின் தில்லு முல்லு வேலைகளை கண்டுபிடித்த மூர்த்தி, கோவத்தில் கத்திய கோபி -
கோபியின் தில்லு முல்லு வேலைகளை கண்டுபிடித்த மூர்த்தி, கோவத்தில் கத்திய கோபி - "மகா சங்கமம்" சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!
கோபியின் தில்லு முல்லு வேலைகளை கண்டுபிடித்த மூர்த்தி, கோவத்தில் கத்திய கோபி – “மகா சங்கமம்” சீரியல் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் தாத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் வந்திருக்கின்றனர். இந்நிலையில் கோபி ராதிகா பழக்கம் மற்றும் கோபி குடும்பத்தை ஏமாற்றுவது பற்றியும் மூர்த்திக்கு தெரிய வருகிறது. இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாக்கியலட்சுமி திடீர் திருப்பம்:

பாக்கியலட்சுமி சீரியலில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த காட்சிகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. தாத்தாவை சந்தோஷப்படுத்த சொந்தபந்தங்களை அழைத்து பிறந்தநாள் விழாவிற்கு ஏற்பாடு செய்ய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் சென்னைக்கு வருகின்றனர். அவர்களுக்கு கோபியின் நடவடிக்கை மீது சந்தேகம் வருகிறது. மூர்த்தி இரவெல்லாம் மச்சானிற்கு போன் வருவதாக சொல்கிறார். மேலும் எழில் தனது அப்பாவுடன் பேசாமல் இருப்பது எல்லாம் சந்தேகத்தை தூண்டுகிறது.

கோபி ராதிகா பழக்கத்தை கண்டுபிடித்த மூர்த்தி, அப்பா பற்றி கதிரிடம் சொன்ன எழில் – “மகா சங்கமம்” சீரியல் இன்றைய எபிசோட்!

பிறந்தநாள் விழாவிற்கு ராதிகா வர கோபி மாட்டிக் கொள்வாரா என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கோபி தில்லு முல்லு வேலைகளை செய்து மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து விடுகிறார். வெளியே ராதிகாவை பார்க்க சென்ற அவர் ராதிகா உடன் நெருக்கமாக பேசிக் கொண்டிருக்க மூர்த்தி அவரை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் மூர்த்தி தனம் ராதிகா வீட்டிற்கு சென்று பேச அப்போது திருமணம் செய்ய இருப்பவர் புகைப்படத்தை காட்டி விடுகிறார். அதில் கோபி இருக்க தனம் மூர்த்தி அதிர்ச்சி அடைகின்றனர்.

Exams Daily Mobile App Download

பின் ஊருக்கு கிளம்பும் நேரத்தில் கோபியிடம் மூர்த்தி தனியாக பேசுகிறார். ராதிகா எல்லா உண்மையும் சொல்லிவிட்டார். உங்களை தான் திருமணம் செய்ய இருப்பதாக சொன்னார். இப்படி எல்லாம் செய்வது உங்களுக்கு அசிங்கமாக இல்லையா என கேட்க உடனே கோவப்பட்ட மூர்த்தி அதை கேட்க நீ யார் என கோவமாக பேசுகிறார். கோபியின் சத்தம் கேட்டு அனைவரும் வந்து கதவை தட்டுகின்றனர். இதனால் மூர்த்தி உண்மையை சொல்லி விடுவாரா என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!