ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – மொபைல் ஆப் மூலமாக வாங்கும் வசதி அறிமுகம்!
ரேஷன் பொருட்களை வாங்க அவ்வப்போது அட்டைதாரர்களுக்கு கூடுதல் வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் எளிமையாக மொபைல் ஆப் மூலமாகவே இருக்கும் இடத்தில் இருந்தே ரேஷன் பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
பொது விநியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் முதலான அன்றாட அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயன்பெற்று வருகின்றனர். தமிழகத்தில் மட்டுமே தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி 69 கோடி பேர் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். மேலும், PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல தரப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வப்போது ரேஷன் கார்டுதாரர்களின் வசதிக்காக விஷயத்தில் திட்டங்கள் புகுத்தப்படுகின்றன.
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகள் திறப்பு!
இந்தியா முழுவதும் வேலைக்காக வெவ்வேறு மாநிலங்களில் இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் நலனுக்காக ”ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு” என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக ரேஷன் கார்டுதாரர்கள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அருகிலுள்ள அனைத்து ரேஷன் பொருட்களையும் வாங்கி கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் தற்போது மொபைல் ஆப் மூலமாகவே எளிமையாக ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டமும் அறிமுகமாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது பொதுமக்களின் வசதிக்காக மேரா ரேஷன் ஆப் என்கிற ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலமாகவே பொது மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளின் முழு விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல் எந்தெந்த பொருட்கள் எவ்வளவு விலை என்பதற்கான விவரங்களையும் அறியலாம். மேலும் கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாகவே எளிமையாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.