தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகள் திறப்பு!
தமிழகத்தில் 1 – 9ம் வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவடைந்த நிலையில் மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் ஜூன் 4ம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைய தொடங்கியதும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கடந்த 2021 செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. முதல் கட்டமாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் பெய்த வடகிழக்கு பருவ மழை கொரோனா மூன்றாம் அலை போன்ற காரணங்களால் மீண்டும் பள்ளிகளை மூடும் சுழல் உருவாகியது. இந்த நேரத்தில் 15 வயதிற்கு உட்பட்ட சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – கல்வித்துறை முக்கிய உத்தரவு!
இதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனையடுத்து பொதுத்தேர்வுகள், ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி கடந்த மே 2ம் தேதி 1 – 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு தொடங்கி மே 13ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவடைந்ததை அடுத்து மே 14 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. தற்போது 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
கோடை விடுமுறைக்கு பின்பு ஜூன் 14ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது ஜூன் 4-ஆம் வாரத்தில் பள்ளிகளைத் திறக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதாவது விடைத்தாள் திருத்தம், ஆசிரியர்களுக்கான பயிற்சி, காலை சிற்றுண்டி, பள்ளி சீரமைப்பு, போன்ற பணிகள் நடைபெற்ற உள்ளதால் ஜூன் 4-வது பள்ளிகள் திறக்கப்படும் என்று தகவல் வந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.