1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு!
கர்நாடகாவில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மே 16ம் தேதியான நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பலரின் கோரிக்கைகளையும் மீறி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளிகள் மீண்டும் திறப்பு:
சிறிது கால கோடை விடுமுறைக்குப் பிறகு மே 16, 2022 அன்று கர்நாடக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஏறக்குறைய 35 நாட்களுக்கு நீடித்த கோடை விடுமுறை மாணவர்களை புத்துணர்ச்சியடையச் செய்தது, அவர்கள் இப்போது நேரடி வகுப்புகளுக்கு பள்ளிகளுக்குத் திரும்பியுள்ளனர். கிட்டத்தட்ட 2 வருட கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, கர்நாடகப் பள்ளிகள் இப்போது இயல்பான கற்பித்தல் மற்றும் கற்றலைத் தொடங்குகின்றன.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் ஆர்ப்பாட்டம்!
பள்ளிகள் திறப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும் கர்நாடகப் பள்ளிகளில் மீண்டும் கற்றலைத் தொடங்குவதற்கு ஆதரவளிக்கும் வகையிலும் முதல்வர் பசவராஜ் பொம்மை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அவர்களுடன் உரையாடினார். முதல்வர் பொம்மை செய்தியாளர்களிடம் கூறுகையில், “நீண்ட நாட்களுக்குப் பிறகு, பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. அவர்கள் கற்பதற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க பாரம்பரிய முறையில் குழந்தைகளை வரவேற்கிறார்கள்” என்று கூறினார்.
Exams Daily Mobile App Download
இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும் வெப்பம் காரணமாக, சிலர் கர்நாடகா பள்ளிகளை தாமதமாக திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அனைத்து சந்தேகங்களையும் புறந்தள்ளி விட்டு, கர்நாடகா கல்வி அமைச்சர் மே 16, 2022 முதல் கர்நாடகா பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து நாகேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் பள்ளி திறப்பு நாளன்று ட்விட்டரில், மாநிலம் முழுவதும் இன்று முதல் பள்ளிகள் தொடங்கியுள்ளன. குழந்தைகளை வரவேற்க பள்ளிகள் தயார் நிலையில் உள்ளன. பள்ளிகளில் குழந்தைகளின் கற்றல் வளைவு தொடங்கியது. குழந்தைகள் வாசிப்பு, எழுத்து, நண்பர்கள் என்று அழகான தருணங்களை அனுபவிப்பார்கள். அனைத்து குழந்தைகளுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.