தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு மே 14ம் தேதி விடுமுறை – உயர்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து நாளை (மே 14) அனைத்து கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 5ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதே போல 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 6ம் தேதி தேர்வு தொடங்கியது. இத்தேர்வுகள் மே 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து 1 – 9ம் வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வானது நாளையுடன் முடிவடைய உள்ளது. இதனையடுத்து ஜூன் 14ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க உள்ளது. பள்ளி விடுமுறையை தொடர்ந்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
TCS, HCL, Infosys உள்ளிட்ட நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – WFH குறித்த அறிவிப்பு வெளியீடு!
ஏனெனில் தமிழகத்தில் மே 14ம் தேதி முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான TANCET நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. எம்பிஏ, எம்சிஏ, எம்.இ, எம்.டெக்., எம்.ஆர்ச், எம். பிளான் ஆகிய முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர TANCET எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே முதுகலை பொறியியல் படிப்புகளில் சேர தகுதியானவர்கள் ஆவார். இத்தேர்வானது ஆண்டுதோறும் நடைபெறும். அதே போல 2022 – 2023 ம் கல்வி ஆண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ படிப்புக்கான TANCET நுழைவுத்தேர்வு மே 14ம் தேதி நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் எம்.டெக்., எம்.ஆர்ச்., எம். பிளான் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு மே 15 ஆம் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் 12 மணி வரை தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இத்தேர்வை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் மற்றும் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் (மே 14) விடுமுறை அளித்து உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.