தமிழகத்தில் ஊக்க ஊதிய உயர்வு பெறாத அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்களின் விவரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்படாத நிலையில் அனைத்து விவரங்களையும் இரு நகல்களாக மே 25 ஆம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆசிரியர்கள்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிபணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த தகுதி தேர்வில் தேர்வான ஆசிரியர்களை கொண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும், இந்த ஆசிரியர்களின் விருப்பப்படி அவரவர் மாவட்டத்திலேயே பணியில் அமர்த்தப்படுகின்றனர். அப்படி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் ஆசிரியர்களின் விவரங்கள் சரியாக சேகரிக்கப்படுவதில்லை.
தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு மே 14ம் தேதி விடுமுறை – உயர்கல்வித்துறை உத்தரவு!
இதனால், ஏற்கனவே மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று வேலை பார்த்து வரும் ஆசிரியர்களின் பெயரை குறிப்பிட்டு அந்த ஆசிரியர் எந்த மாவட்டத்திற்கு மாறுதல் பெற்றுள்ளார் என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும். இப்படி குறிப்பிட்டால் மட்டுமே மாறுதல் பெற்று சென்ற ஆசிரியர் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே கருத்துரு பெற ஏதுவாக இருக்கும். இந்நிலையில் மாவட்ட மாறுதலில் சென்ற ஆசிரியர் எந்த மாவட்டத்தில் இருந்து மாறுதல் பெற்று வந்துள்ளார் எனவும், அந்த மாவட்டத்திற்குரிய பெயர் மற்றும் முகவரி என அனைத்து விவரங்களையும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உரிய படிவத்தில் பதிவு செய்து அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதுவரை விவரங்கள் ஏதும் அனுப்பப்படாமல் இருக்கும் ஆசிரியர்கள் யாராவது இருப்பின் அவர்கள் சார்பான கருத்துரைகளை தனியாக இரு நகல்களாக அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நகல் அனைத்தையும் மேல் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களுடன் அரசுக்கு வரும் மே 25-ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக்க ஊதிய உயர்வு பெறாத அரசு ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை மீண்டும் அனுப்பும்படி பள்ளி கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளது.