ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – புதிய வசதிகள் அறிமுகம்!
ரயில் பயணத்தின் போது ரயிலில் தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் அவர்களுக்காக தனியாக படுக்கை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்ட தூரம் செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வசதி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது முதல் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே கடும் சரிவை சந்தித்தது. தொற்று அச்சத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்த்தனர். பேருந்து போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து ரயில் நிலையங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது. அதனால் ரயில்வேயின் முக்கிய வழித்தட ரயில்கள் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் மக்களின் தேவை கருதி கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி படிப்படியாக ரயில்கள் மீண்டும் இயக்க தொடங்கியது.
Exams Daily Mobile App Download
கொரோனா வைரஸ் தொற்றை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முன்பதிவு அடிப்படையில் மட்டுமே ரயில் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது ஒரு சில ரயில்களில் முன்பதிவு இல்லா பெட்டிகளும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்வே துறை புதிய அறிமுகமாக தாயுடன் குழந்தையும் படுத்து தூங்கும் வகையில் புதிய படுக்கை வசதியை கொண்டு வந்துள்ளது. வழக்கமான, படுக்கை வசதிக்கு பக்கத்திலேயே குழந்தைகென்று பிரத்யேகமாக சிறிய அளவிலான பெர்த் தயாரிக்கப்பட்டு உள்ளது.
அசானி புயல் எதிரொலி – தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் அறிக்கை!
இதில் குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குழந்தை உருண்டு கீழே விழாமல் இருக்க சீட்டில் ஒரு இரும்பு கம்பியும் பொருத்தப்பட்டு உள்ளது. இதற்காக நீண்ட தூரம் செல்லும் முக்கியமான 70 விரைவு ரயில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றும் முதலில் குளிர்சாதன ரயில் பெட்டிகளில் இந்த வசதி தொடங்க உள்ளது. ரயிலில் பயணம் செய்யும் குழந்தைகளையும், பெண்களையும் கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் இத்தகைய வசதியை கொண்டு வந்துள்ளது.