அசானி புயல் எதிரொலி – தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் அறிக்கை!

0
அசானி புயல் எதிரொலி - தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் அறிக்கை!
அசானி புயல் எதிரொலி - தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் அறிக்கை!
அசானி புயல் எதிரொலி – தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும்! வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் 100 தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய புயல் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்னும் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்

தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கடந்த 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்கியது. தமிழகத்தில் 113 டிகிரியை வெயில் தாண்ட வாய்ப்பு உள்ளதாகவும் இது 25 நாட்கள் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருமாறியுள்ளது. இதற்கு அசானி புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஹாப்பி நியூஸ் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்த புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அசனி புயல் காரணமாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது. தற்போது இந்த புயல் வலுவிழந்து சூறாவளியாக மாறி உள்ள நிலையில் ஆந்திர கடற்கரைக்கு சூறாவளி எச்சரிக்கை மற்றும் ரெட் அலர்ட்டும் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தமிழகத்தில் அசானி புயல் காரணமாக சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்னும் சற்று நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், ராணிப்பேட்டை, தேனி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னும் சற்று மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என்றும் இதில் குறிப்பாக திண்டுக்கல், நெல்லை, மதுரை, விருதுநகர், குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!