TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – இதெற்கெல்லாம் தடை!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தேர்வு எழுத விரும்பும் தேர்வர்களுக்கு சில விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கட்டாயமாக இதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தேர்வர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக அனைத்து அரசு போட்டித்தேர்வுகளும் நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் இந்த ஆண்டுக்குரிய தேர்வு கால அட்டவணையை வெளியிட்டது. இதில் குரூப் 1, குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வு உள்ளிட்ட பல்வேறு வகையான தேர்வுகள் இடம்பெற்றுள்ளது. இதில் குரூப் 2,2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடத்தப்பட உள்ளதாகவும் இதன் மூலமாக 5000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில் நாளை (மே 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அத்துடன் குரூப் 4 & VAO பணியிடத்திற்கான தேர்வு வருகிற ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வு மூலமாக 7000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது குரூப் 2, 2ஏ தேர்வு வருகிற மே 21ம் தேதி அன்று நடைபெற உள்ளதால் இத்தேர்வு நடைபெற இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் இத்தேர்வுக்குரிய நுழைவு சீட்டு இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் TNPSCயின் இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நிலையில் தேர்வுக்கு பல லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதனால் தேர்வு மையங்கள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் குரூப் 2, 2ஏ தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று TNPSC தேர்வாணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் தேர்வர்கள் ஸ்மார்ட் வாட்ச் அணியவும் தேர்வாணையம் தடை செய்துள்ளது.