மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3வது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு!
எப்போதும் அரசு ஊழியர்களுக்கு முதல் இரண்டு குழந்தைகளுக்கு தான் மகப்பேறு விடுப்பு வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது முதல் கணவரை விவாகரத்து செய்து, மறுமணம் செய்து கொண்டு அதற்குப் பின்பு கருத்தரித்தாலும் மகப்பேறு விடுப்பு வழங்கலாம் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மகப்பேறு விடுப்பு:
பெண் அரசு ஊழியர்கள் குழந்தை பெற்றுக்கொண்ட பிறகு சிவில் சர்வீஸ் விதிகளின்படி மகப்பேறு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். கிட்டத்தட்ட இரண்டு குழந்தைகள் வரை மகப்பேறு விடுப்பு எடுக்க அரசு உத்தரவு வழங்கியுள்ளது. ஆனால் மூன்றாம் குழந்தைக்கு கர்ப்பமாகும்போது அந்தக் குழந்தைக்காக மகப்பேறு விடுப்பு கொடுக்கப்படுவதில்லை. இதுமட்டுமல்லாமல் குழந்தை பிறந்து இறந்து விட்டாலும் சிறிது காலம் கழித்து இருந்தாலும்கூட அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த திவாரி என்கிற ஆசிரியை ஒருவர் கடந்த 2002ஆம் ஆண்டு முதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உண்டு. இந்த இரண்டு குழந்தைக்குமே மகப்பேறு விடுமுறை பெற்றிருக்கிறார். இதன் பின்பு கடந்த 2011 ஆண்டு முதல் கணவருடன் விவாகரத்து செய்து விட்டு 2021 ஆம் ஆண்டு மீண்டும் மற்றொரு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். தற்போது மூன்றாவது குழந்தைக்கு கர்ப்பமாக உள்ளார்.
Exams Daily Mobile App Download
தனது மூன்றாவது குழந்தைக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்நிலையில் திவாரி ஆசிரியையின் மனுவிற்கு நீதிமன்றம் ஒரு பதிலை தெரிவித்துள்ளது. அதாவது முதல் கணவரை விவாகரத்து செய்து, மறுமணம் செய்து கொண்டு அதற்குப் பின்பு கருத்தரித்தாலும் குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.