தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களின் கவனத்திற்கு – திருமணமானவராக இருந்தால் இந்த அப்டேட் கட்டாயம்!
தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் மலிவான விலையிலும், இலவசமாகவும் ரேஷன் பொருட்கள் ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது புதிதாக திருமணமானவராக இருந்தால் அவர்கள் தங்களின் ரேஷன் கார்டில் கட்டாயமாக சில அப்டேட்களை செய்ய வேண்டும். இதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ரேஷன் கார்டு
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவையான உணவு பொருட்கள் ரேஷன் கார்டு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது அரசின் நிதி உதவிகள் கூட ரேஷன் கார்டு மூலமாக செயற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கார்டு மூலமாக பேரிடர் காலங்களில் உணவு பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதனால் அனைவரும் ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. தற்போது நீங்கள் புதிதாக திருமணமானவராக இருந்தால் ரேஷன் கார்டில் மேற்கொள்ள வேண்டிய அப்டேட்டுகளை செய்ய வேண்டும்.
புதிதாக கார் வாங்கிய “கலக்கப் போவது யாரு” நாஞ்சில் விஜயன் – அவரே வெளியிட்ட நெகிழ்ச்சியான பதிவு!
இந்த அப்டேட்டுகளை தற்போது விரிவாக பார்ப்போம். பொதுவாக ரேஷன் கார்டில் தங்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயரையும் பதிவு செய்ய வேண்டும். அதன்படி நீங்கள் புதியதாக திருமணமானவராக இருந்தால் உங்களின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டும். இதையடுத்து உங்கள் குடும்பத்தில் குழந்தை பிறந்தாலும் குழந்தையின் பெயர் சேர்க்கப்பட வேண்டும். மேலும் நீங்கள் முகவரியை மாற்றியிருந்தாலும் அதனையும் ரேஷன் கார்டில் மாற்றி பதிவு செய்ய வேண்டும். இது போன்று ஆதார் அட்டையிலும் தங்களின் சரியான விவரங்களை மாற்ற வேண்டும்.
Exams Daily Mobile App Download
ரேஷன் கார்டில் திருத்தங்களை மேற்கொள்ள திருத்தப்பட்ட ஆதார் அட்டையின் நகலுடன் உங்கள் பகுதியில் உள்ள உணவுத் துறை அலுவலரிடம் சென்று ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். இதில் புதிதாக குழந்தையின் பெயரை சேர்க்க வேண்டுமெனில் இதற்கு முதலில் அந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பெற வேண்டும். அதன் பின்னர் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று சமர்ப்பிக்க வேண்டும். இதனை ஆன்லைன் வாயிலாகவும் மேற்கொள்ளலாம் ஆனால் தங்களின் மாநில இணையதள முகவரியில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்று உறுதி செய்து பிறகு மேற்கொள்ள வேண்டும்.