மாநிலத்தில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி – பொதுமக்கள் அச்சம்!
நாடு முழுவதும் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் ஒரேநாளில் 64 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா பாதிப்பு:
கொரோனாவின் மூன்று அலைகளில் இருந்து மக்கள் தற்போது படிப்படியாக மீண்டு வருகின்றனர். பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வழக்கம் போல வந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு!
ராயக்கடா மாவட்டத்தில் கோட்லகுடா என்ற பகுதியில் இயங்கி வந்த 2 பள்ளி மாணவர் தங்கும் விடுதியில் இருக்கும் 257 மாணாக்கர்களுக்கு சுகாதாரத்துறையினர் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்தனர். அதில் 64 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் யாருக்கும் பாதிப்புக்கான அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
Exams Daily Mobile App Download
சுகாதார பணியாளர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து ராயக்கடா மாவட்ட ஆட்சியர் சரேஷ்குமார் மிஸ்ரா கூறுகையில், மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனை மாதிரிகள் மறுசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், தொற்று கண்டறியப்பட்டிருக்கும் மாணவர் விடுதிகளை மருத்துவ நிபுணர்கள் ஆய்விட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.