தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – கல்வித்துறை அமைச்சா் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு வராதோா் 4 சதவிகிதம் மட்டுமே என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
முக்கிய தகவல்:
தமிழகத்தில் 3வது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியில் குறையத் தொடங்கியதால், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வு நடைபெறாத நிலையில், இந்த ஆண்டுக்கான 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அதன்படி, 12 ஆம் வகுப்புக்கு மே 5ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கி உள்ளன. இதையடுத்து 10 ஆம் வகுப்புக்கு மே 6 ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் நாளை (மே 10) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் பேசிய போது, கடந்த கல்வி ஆண்டுகளில் 10, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 6 முதல் 7 % வரை மாணவா்கள் பங்கேற்கவில்லை. இந்த சதவிகிதம் வழக்கமான அளவாகத்தான் இருக்கிறது. இந்த ஆண்டு 3 முதல் 4% மாணவர்கள் தோ்வுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் மாணவ, மாணவிகள் எந்த ஒரு தேர்வு அச்சமும் இல்லாமல், தைரியமாக தோ்வெழுத வர வேண்டும். தேர்வு மதிப்பெண்கள் மட்டுமே மாணவ, மாணவிகளை மதிப்பீடு செய்யவில்லை. அவா்களுடைய திறமையைத்தான் மதிப்பீடு செய்யப் போகிறது.
மாணவ, மாணவிகள் தங்களுக்குத் தெரிந்ததை மகிழ்ச்சியாக எழுத வேண்டும். என்ன மதிப்பெண் வருகிறதோ, அதற்கான தீா்வு கண்டிப்பாக இருக்கும். தங்களுடைய தனித்திறமையை வளா்த்துக் கொள்ள வேண்டும். பள்ளியில் முதலில் தோல்வியைச் சந்தித்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், அடுத்த முறை எழுதி தோ்ச்சி பெற்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்தாா். குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவரது நோக்கம் முழுவதும் வேளாண் சாா்ந்ததாகவே இருந்தது என மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
Exams Daily Mobile App Download
கடந்த 2019- ஆம் ஆண்டில் இயல்பாக வகுப்புகள், தோ்வுகள் நடைபெற்ற காலத்திலேயே 49,000 போ் பொதுத் தோ்வில் பங்கேற்கவில்லை. இதுபோன்ற நிலை இனி இருக்கக்கூடாது. எனவே, மாணவா்கள் துணிச்சலுடன் வந்து தோ்வு எழுதினால், அவா்கள் எதிர்காலத்திற்கான நாற்காலி காத்துக் கொண்டு உள்ளது. அதற்கு தமிழக முதல்வர் துணையாக இருப்பார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.