தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு? இன்று வெளியாகும் ஜாக்பாட் அறிவிப்பு!
தமிழகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில் தற்போது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு குறித்த அறிவிப்பை முதல்வர் வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி சட்டமன்ற பேரவை நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடந்த 6ம் தேதியன்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் தொடங்கப்பட்டது. அதே போல கடந்த 13ம் தேதி வேளாண்மை, மீன்வளம், கால்நடை, பால்வளத்துறை ஆகிய மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அந்த வகையில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் சூழலில் அவ்வப்போது பல புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மேட்ச்மேக்கிங் சலுகையுடன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
இதற்கிடையில் கடந்த 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டு இப்போது 18ம் தேதி முதல் மீண்டுமாக சட்டப்பேரவை கூடி இருக்கிறது. இப்போது தமிழக சட்டமன்றத்தில் இன்று (மே.7) நிதித்துறை, சிறப்பு முயற்சிகள் துறை, ஆளுநர், அமைச்சரவை மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்போது கேள்வி நேரம் இல்லாமல் சட்டபேரவையை நடத்த அமைச்சர், அவை முன்னவர் துரைமுருகன் ஆகியோர் சபாநாயகருக்கு கோரிக்கை விடுத்துள்ளதால் இன்று கேள்வி நேரம் இல்லாமல் சட்டப்பேரவை நடைபெற்று கொண்டிருக்கிறது.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்துவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கல் குறித்த திருத்த மசோதாவை முதல்வர் முக ஸ்டாலின் இன்று (மே.7) தாக்கல் செய்ய இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது நடந்தால், விரைவில் அரசு ஊழியர்கள் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் பயனை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.