தமிழகத்தில் மேட்ச்மேக்கிங் சலுகையுடன் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – நிறுவனம் அதிரடி அறிவிப்பு!
மதுரையைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இலவச மேட்ச்மேக்கிங் சேவைகளை வழங்குகிறது. இந்த சேவையைப் பயன்படுத்தி திருமணம் செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு
கொரோனா நோய் தொற்றின் தாக்கத்திற்கு பிறகு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் மனநலம் குறித்து அதிக அக்கறை காட்டுகின்றன. அந்த வகையில் ஊழியர்களை தக்கவைத்துக் கொள்ளவும், சரியான வேலை வாழ்க்கை சமநிலையை அடைய நிறுவனங்கள் பல்வேறு விருப்பங்களை வழங்குகின்றன. இப்போது மதுரையை தளமாகக் கொண்ட ஐடி நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி, இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள சேவையைப் பயன்படுத்தி திருமணம் செய்பவர்களுக்கு ஊதிய உயர்வும் கிடைக்க உள்ளது.
பெங்களூருவில் நாளை (மே 8) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 60+ நிறுவனங்கள் பங்கேற்பு!
அந்த வகையில், மூகாம்பிகா இன்ஃபோசொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தேய்வு விகிதம் பல ஆண்டுகளாக 10 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பலருக்கு வினோதமாகத் தோன்றும் இந்த முயற்சி குறித்து நிறுவனர் எம்.பி.செல்வகணேஷ் கூறுகையில், ‘எங்கள் ஊழியர்களில் பெரும்பாலானோர் கிராமங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் வயதான பெற்றோருடன் இருப்பதால் அவர்களுக்கு சரியான உலகக் கண்ணோட்டம் இல்லை. எனவே அவர்கள் சரியான பொருத்தத்தைக் கண்டுபிடிக்கத் தவறுகின்றனர்.
அதனால் மேட்ச்மேக்கிங் நெட்வொர்க் மூலம் அத்தகைய ஊழியர்களுக்கு நாங்கள் உதவுகிறோம். திருமணங்கள் சிறந்த ஒன்றுகூடல்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வேலைகளை மாற்ற விரும்பும்போது, மூகாம்பிகா இன்ஃபோசொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் சுமார் 40 சதவீத ஊழியர்கள், ஐந்தாண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நீண்ட கால ஊழியர்களைப் பற்றி குறிப்பிட்ட செல்வகணேஷ், ‘அவர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள் என்று நினைத்து அவர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
Exams Daily Mobile App Download
அத்தகைய எண்ணம் அவர்களுக்கு வருவதற்கு முன்பே நாங்கள் அவர்களுக்கு உரியதை வழங்குகிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும், தங்கள் ஊழியர்களுடன் பிணைப்பை உருவாக்க நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்ய வேண்டும் என்றும், எல்லாவற்றையும் வணிகக் கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது என்றும் செல்வகணேஷ் நம்புகிறார். இப்போது மூகாம்பிகா இன்ஃபோசொல்யூஷன்ஸ் நிறுவனம் சுமார் 750 ஊழியர்களுக்கு மேட்ரிமோனியல் சேவையை வழங்குகிறது. பல சலுகைகளில், இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இந்த வசதியை அனுபவிக்கிறார்கள்.