அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – சான்றிதழ் கட்டணம் உயர்வு!
அண்ணா பல்கலையின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட, பல்வேறு சான்றிதழ்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள புதிய சான்றிதழ் கட்டணங்கள் குறித்த விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
கட்டண உயர்வு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை நேரடி முறையில் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை அனுமதி வழங்கியது. மேலும் ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
மத்திய அரசின் பென்ஷன் வழங்குவதில் தாமதம்? காரணம் இதுதான்! வெளியான தகவல்!
இதனையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அறிவியல், கலை, பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அதன் பிறகு வழக்கம் போல் கல்லூரிகள் திறக்கப்பட்டது. தற்போது நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வரும் நிலையில் அண்ணா பல்கலையின் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட, பல்வேறு சான்றிதழ்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
புதிய கட்டணமாக 1,500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாரங்கள் அடங்கிய அசல் சான்றிதழின் இரண்டாம் பிரதி பெற, 3,000 ரூபாய்; ஒருங்கிணைந்த கிரேடு மதிப்பெண் சான்றிதழின் இரண்டாம் பிரதிக்கு, 5,000 ரூபாய் மற்றும் பட்ட சான்றிதழின் அசல் பிரதி பெற 10,000 ரூபாய் தற்காலிக பட்டச் சான்றிதழில் திருத்தம் செய்ய, 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பட்ட சான்றிதழில் மாதம் மற்றும் ஆண்டு குறிப்பிட, 300 ரூபாய்; உண்மை தன்மை சான்றிதழுக்கு இந்திய நிறுவனங்கள் என்றால், 2,000 ரூபாயும் வெளிநாடுகள் என்றால் 100 இந்திய மதிப்பில், 7,500 ரூபாய் என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.