தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த ஷாக் நியூஸ் – முதல் நாளில் 32,674 பேர் ஆப்சென்ட்!
தமிழகத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த பொது தேர்வில் 8.22 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ள நிலையில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என அறிவித்துள்ளது.
பொது தேர்வு
இரண்டு வருடமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தி வந்தனர். நடப்பு கல்வி ஆண்டில் இரண்டாம் அலை மற்றும் மூன்றாவது அலையால் தாமதமாக பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 10,11, மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2 வருடமாக பொதுத் தேர்வு நடத்தப்படாமலே தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
பள்ளிகளுக்கு அதிகமான விடுமுறைகள் விடப்பட்டதால் மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் கூட வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பொதுவாக பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மார்ச் மாதத்திலும் ஏப்ரல் மாதத்திலும் தேர்வுகள் நடத்தி விடுமுறை விடுவர். ஆனால் கொரோனா தொற்றின் காரணமாக இந்த வருடம் மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் நடத்துகின்றனர்.
Cognizant நிறுவனத்தில் 50,000 காலிப்பணியிடங்கள் – பட்டதாரிகள் கவனத்திற்கு!
இந்நிலையில் நேற்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்கப்பட்டது. தமிழகத்தில் மட்டுமே 8.22 லட்சம் பேர் தேர்வுகள் எழுதுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பொதுத் தேர்வு எழுதும் முதல் நாளிலேயே 32,674 மாணவர்கள் ஆப்சென்ட் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் எந்த விதமான முறைகேடுகளும் நடக்கவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.