விஜய் டிவி ‘ஈரமான ரோஜாவே 2’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ஜீவாவை கேள்வி கேட்ட ப்ரியா!
விஜய் டிவி “ஈரமான ரோஜாவே 2” சீரியலில் ஜீவா குடித்துவிட்டு போலீசில் சிக்க ப்ரியா அவருடைய அப்பா உதவி உடன் கூட்டிக் கொண்டு வருகிறார். நீங்க இப்படி நடந்து கொள்வதற்கு என்ன அர்த்தம் என ப்ரியா கேட்க நான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன் என ஜீவா சொல்கிறார்.
ஈரமான ரோஜாவே 2:
ஈரமான ரோஜாவே 2 சீரியலில் ஜீவாவும் காவ்யாவும் காதலித்து வந்த நிலையில் விதியின் மாற்றத்தால் ஜீவா ப்ரியாவையும், காவ்யா பார்த்திபனையும் திருமணம் செய்து கொண்டனர். அதனால் இரண்டு ஜோடிகளும் திருமண பந்தத்திற்குள் போக முடியாமல் தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் பார்த்திபன் காவ்யா உடன் நெருக்கமாக முயற்சி செய்கிறார். ஆனால் காவ்யா அதற்கு எந்த மரியாதையும் கொடுக்காமல் இருக்கிறார். அதனால் பல இடங்களில் பார்த்திபனிற்கு மன வருத்தம் ஏற்படுகிறது.
Exams Daily Mobile App Download
மறுபக்கம் காவ்யாவை மறக்க முடியாமல் ஜீவா குடித்துவிட்டு தினமும் வந்து உடம்பை கெடுத்துக் கொள்கிறார். அதனால் ப்ரியா ஜீவா ஏன் இப்படி செய்கிறார் என தெரியாமல் அவருடைய அம்மாவிடம் புலம்புகிறார். பின் இன்று ஒரு முடிவு கட்ட வேண்டும் என அவர் இருக்க ஆனால் ஜீவா குடித்துவிட்டு வந்து போலீசிடம் மாட்டிக் கொள்கிறார். ப்ரியா சென்று அவரை காப்பாற்ற அது பிரியா அதிரடி முடிவு ஒன்றை எடுக்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு நடந்தது என்ன? அவரே சொன்ன விளக்கம்!
அதில் ப்ரியா ஏன் இப்படி குடித்துவிட்டு உடம்பை கெடுத்துக் கொள்கிறீர்கள் என கேட்க ஜீவா எதுவும் பேசாமல் இருக்கிறார். பின் நீங்க எதோ காரணத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் இப்படி செய்கிறீர்கள் என கேட்க ஜீவா காவ்யா உடன் காதலை நினைத்து பார்க்கிறார். பின் நீங்க சொல்லும் முடிவை வைத்து தான் நான் இந்த வீட்டில் இருக்கலாமா வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும். இந்த பந்தத்திற்கு என்ன அர்த்தம் என தாலியை எடுத்துக் காட்டுகிறார். அதை பார்த்த ஜீவா நான் ஒரு பெண்ணை காதலித்தேன் என சொல்கிறார்.