தமிழகத்தில் உள்ள அனைத்து சவர்மா கடைகளிலும் அதிகாரிகள் சோதனை – 10 கடைகளுக்கு அபராதம்!
சவர்மா சாப்பிட்ட கேரளா மாணவி பலியானதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சவர்மா கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் இருந்த 10 கடைகளுக்கு சுமார் 2000 ரூபாய் வரைக்கும் அபராதம் விதித்துள்ளனர்.
சவர்மா கடைகளில் சோதனை:
தற்போதெல்லாம் அதிக அளவில் மக்கள் பாஸ்ட் புட் உணவுகளை தான் அதிகமாக விரும்பி உண்டு வருகின்றனர். வீட்டில் சமைப்பதை விட்டு விட்டு குடும்பமாகவே ஹோட்டலுக்கு சென்று தான் சாப்பிட்டு வருகின்றனர். ஹோட்டலில் சாப்பிடுவதை நாகரீகம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள் போல. இதுமட்டுமல்லாமல், உணவில் கலரும் சேர்ப்பதால் அதை பார்த்ததும் மக்களுக்கு சாப்பிட வேண்டும் என தூண்டுகிறது. சமீபத்தில் கேரளா மாநிலத்தில் தெருவோர கடைகளில் சவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விஷயம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – அரசின் முடிவு என்ன?
எதற்காக அந்த மாணவி உயிரிழந்தார் என அந்த கடைகளுக்கே சென்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சுகாதாரமற்ற முறையில் அந்த சவர்மா செய்துள்ளனர். அதாவது அசுத்தமான தண்ணீர் மற்றும் பழைய பொருள்களில் அந்த சவர்மா செய்த காரணத்தினால் ஒரு பாக்டிரியா பரவி தான் அந்த மாணவி உயிரிழந்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாணவி மட்டுமல்லாமல் பல பள்ளி மாணவிகளும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இதே போல வேறு எந்த பொது மக்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அனைத்து கடைகளுக்கும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் சமைக்கும் கடைகளுக்கு சீல் வைத்து கொண்டிருக்கின்றனர். அதோடு அபராதமும் வசூலித்து கொண்டிருக்கின்றனர். இதே போல தமிழகத்தில் உள்ள அனைத்து சவர்மா கடைகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுகாதாரமற்ற முறையில் இருந்த 10 கடைகளுக்கு சுமார் 2000 ரூபாய் வரைக்கும் அபராதம் விதித்துள்ளனர்.